Monday, August 20, 2012

நான்காம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் பதிவர்கள் எழுதும் மெகா த்ரில் தொடர்

மன்னிக்கவும் இந்த தொடர் என்னால் அகலபாதாளத்தில் சென்று விட்டது.ரெண்டு வாரங்களுக்கு மேலாய் ஒரு பதிவும் போட முடியலை.எனக்கு கதை எல்லாம் எழுத வராது இருந்தாலும் நானும் எழுதுறேன் என ஒத்துகொண்டேன் அதற்காகவாவது எதையாவது எழுதவேண்டும் என்று எழுதி சீனு ஹாரி அவர்களுக்கு அனுப்பினேன் ஹாரி கதையை டோட்டாலை மாற்றி கொடுத்தார் சீனு சரியான எழுத்து நடையில் மாற்றினார்.நான் எழுதும் போது சும்மா ரெண்டு பேரு பேசி கொண்டால் எப்படி இருக்கும்மா அப்படி தான் எழுதினேன்.
கதையில் அந்நியன் கதை எல்லாம் வரும் டென்சன் ஆக வேண்டாம் எனக்கு அவ்வளவு தான் மூளை வேலை செய்யும் என்னால் இவ்வளவு தான் கதையை எழுதமுடிந்தது.இத்தனை நாள் காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.கொஞ்சம் வேலை அதான் முடியலை இனி கேவலமான நான் எழுதிய கதை...ரெண்டு நாட்களுக்கு முன்பே வர வேண்டியது நெட்CONNECTION முடிந்து விட்டது...


இதற்கு முந்தைய பாகத்தினை படிக்காதவர்கள்  படிக்க...
பாகம்1 - click
பாகம்2 - click
பாகம்3 -click


war begins...
கையில் அடிபட்ட காயத்திற்கு ரெண்டாவது தடவை கட்டுபோட்டு விட்டு "ரெஸ்ட் எடுங்க ரஜினி சார்.. உடம்ப பார்த்துகோங்க" தான் அனுபில் மருத்துவ அக்கறையைக் கலந்து இன்னும் சில மருத்துவ சம்பாசனைகளின் பின் அறையை காலி செய்தார் சென்னையின் பிரபல மருத்துவர். மருத்துவர் வெளியேறிய தருணம் அறையில் நிலவிய அமைதியைக் குலைக்கும் வண்ணம் அலறியது தொலைபேசி. தமிழக முதல்வருக்கு போன் ரிங் ஆனால் கூட பாம் வெடிப்பது போன்ற சத்தத்தை எற்படுதியிருந்தது சமீபத்திய குண்டு வெடிப்பு. அவசரமாக அலைபேசியை எடுத்து தன் காதில் வைத்து

"ஹலோ ரஜினி ஸ்பீகிங்"

"சார் நான் ராஜேந்திரன் பேசுறேன்' 

"சொல்லுங்க ராஜேந்திரன் "

"உங்க கட்சி ஆள யாரோ கொன்று போட்டு இருக்காங்க ரஜினி.. சம்பவ இடமே கொஞ்சம் பரபரப்பா, தொண்டர்கள் ஆவேசத்த தடியடி நடத்தி கலைக்க வேண்டாம்ன்னு யோசிக்கிறோம், நீங்க வந்து பேசினா ஹெல்ப்புல்லா இருக்கும். கொஞ்சம் வர முடியுமா சார்"

  ----------------------------
------------------------------


------------------------------

------------------------------
----------

சில நிமிடங்களில் முதல்வர் சம்பவ இடத்தை அடைந்திருந்தார்.  

இறந்தவனின் கடைசி தருணங்கள் எவ்வளவு கொடுமையானதாய் இருந்திருக்கும் என்பது ரஜினியின் மூளிக்கு தெரிந்திருக்க வேண்டும். இறந்து இறைந்து கிடந்த அவனை கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். 

சம்பவ இடத்தில தலைவரின் அருகில் விஜயகாந்த் மற்றும் சரத்குமார். தங்களுக்கு
ள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

ரஜினி தன் பக்கத்தில் இருந்த சூரியாவிடம்

"சூர்யா நீங்களா இந்த கேஸ் விசாரிக்க போறீங்க?"

"ஆமா சார்"

"ஏதாவது க்ளு கிடைச்சுதா?

"இனி தான் ஆரம்பிக்கணும் சார் .. ஆனா KA-BAR-ZOMBIE என்ற வகைக் கத்தியால குத்தி கொன்று
இருக்காங்க.. இது வந்து உலகத்திலயே தலை சிறந்த கொலைகாரங்க மட்டுமே
உபயோகிக்கிற கத்தி. அதால குத்தி கொன்று விட்டு சுவற்றில் நம்மை குழப்ப
வேண்டும் என்றே ஏதோ புரியாத வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள். இதை போன்ற வார்த்தை விளையாட்டினை
கண்டுபிடிக்கும் ஒரு இன்டலீஜன்ட் ஆபீசர் வர சொல்லி இருக்கோம்."

"முடிந்த வரை சீக்கிரம் கண்டு பிடியுங்க சூர்யாஎன் கூட இருக்றவங்க பாதிக்கபடுவ முதல்வனா தலைவனா என்னால சகிச்சிக்க முடியல"

"கண்டிப்பா சார் கூடியசிக்கிரம் கண்டுபிடிக்கிறோம்."

பின் தொண்டர்களையும் சமாதனம் செய்து அங்கிருந்து விடை பெற ஆயத்தமானார் ரஜினி. கார் வரை சென்று வரை
வழியனுப்பி விட்டு ராஜேந்திரனும் கமிஷனர் அலுவலகம் நோக்கி விரைந்தார். காக்கையை போல் கரைந்து கொண்டிருந்த கூட்டமும் மெதுவாக கலைந்தது.. பாதுகப்பிற்காக இரண்டு கான்ஸ்டபிள்கள் நின்று கொண்டிருந்தார்கள். வரப்போகும் இன்டெலிஜென்ட் ஆபிசரை எதிர்பார்த்து சூர்யா காத்துக் கொண்டிருந்த வேளையில், விஜயகாந்


தும், சரத்குமாரும் கண்களால் எதையோ பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
------------------------------


------------------------------

------------------------------
-----------------------------------

புரியாத வார்த்தைகளை கண்டுபிடிக்கும் இன்டலீஜன்ட்  ஆபிசரான பிரகாஷ்ராஜும்
அவர் அசிஸ்டென்ட் சந்தானமும் லொட்டு லோஸ்கு வண்டியில் வந்து தட்ஸ் இட் தட்ஸ் இட் என சொல்லி கொண்டே இறங்கினார்

"என்னமோ செவுத்துல ஒட்டின நமீதா போஸ்டர குறுகுறுன்னு பாக்குரமா
திரியே
பாத்துட்டு இருக்கீங்களே அப்படி என்ன தான் சார் எழுதி இருக்கு"வியர்த்து போன முகத்துடன் பிரகாஷ்ராஜ் படபடக்க ஆரம்பித்தார் "டேய் டேய் இவன் ரொம்ப டேஞ்சர்ரான ஆளு,
சந்தா நாம ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கனும். என்ன பண்ண போறான், எப்படி பண்ண போறான், அவன் மட்டும் கையில சிக்கட்டும்,கையில சிக்கட்டும்" தட்ஸ் இட்    

"அதானே பார்த்தேன். இந்த ஒரு டயலாக் தவிர வேற எதையுமே உங்களுக்குப் பேசத் தெரியாதா?. கோல செஞ்சவன் எவன்னே தெரியாது? எதோ கூட இருந்து பார்த்த மாதிரியே  கையில சிக்கட்டும்,கையில சிக்கட்டும்
ன்னு சொல்றீங்க. இதுல எவன பார்த்தாலும் அன்னியன பாக்குற மாதிரியே பாக்றது. சொல்லுங்க சார் அப்படி என்ன தான் அதுல எழுதி இருக்கு"

கொன்று விடுவது போல் சந்தனத்தைப் பார்த்து விட்டு சூர்யாவிடம் "சூர்யா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்"

"பர்ஸ்ட் நைட்டில் கொஞ்சம் டைம் வேணும் என்று கேட்டவர் தானே இதுல
கேட்க்காமல் இருப்பாரா"

"சந்தா....." பிரகாஸ்ராஜ் ஆக்ரோஷ ராஜாக  மாறியிருந்தார்.

சந்தானத்தின் கிண்டல்களை ரசித்துக் கொண்டே புன்னகையுடன் சூர்யா, "


ஓகே சார்.. நாளைக்குள்ள எனக்கு ரிபோர்ட் வேணும், ரஜினி சார் கொஞ்சம் ரஷ் பண்றாங்க "

"பார்க்கலாம் சார்.. முயற்சி செய்றன்"

நடந்ததைப் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்த விஜயகாந்தும் சரத்தும் அந்த
இடத்திற்கு வந்தார்கள்..  சிவந்த கண்களையுடைய விஜயகாந்த் ஆரம்பித்தார் "சார் இதை எல்லாம் ஏன் தீவிரவாதிங்க செய்து இருக்க கூடாது"

"சார் பாகிஸ்தான் தீவரவாதி வாசிம்கான் தானே சார் இதை செய்து இருப்பான்", சந்தானம்.

"யோவ் அடங்குயா"  பிரகாஷ்ராஜ்

"சார் நாளைக்கு எங்க உயிருக்கும் ஆபத்து வந்தால் என்ன சார் பண்ணுறது
எங்களுக்கு பாதுகாப்பு தாங்க சார்"

"ஆமாம் ஆமாம் அண்ணன் சொல்லுறதும் சரி தான் எங்க உயிர்க்கு ஆபத்து வந்தால்
என்ன சார் பண்ணுவோம், எங்களுக்கு பாதுகாப்பு தாங்க" சரத்குமார்

"என்னவோ தாங்க தாங்கன்னு சொல்றீங்களே, இது என்ன நாயர் கடை போண்டாவா, என்னை சட்டிக்குள்ள கையா விட்டு எடுக்றதுக்கு".   மனதுக்குள் (அல்லகைகளை எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டங்க). முக்கியமான ஆளே போலீஸ்
பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லி விட்டார் உங்களுக்கு (அல்லகைகளுக்கு) எல்லாம் எப்படி
பாதுகாப்பு தருவது. ஏன் சார் ஒரு வேலை நீங்க தான் தீவரவாதிகளுக்கு பணம்
கொடுத்து இதை எல்லாம் பண்ண சொன்னீங்களா?"

விஜயகாந்து முறைக்க
விஜயகாந்தின் பின்னால் இருந்த தொண்டன் "ஹே" என கத்தினான்..

"அய்யயோ அப்படி எல்லாம் பார்க்காதீங்க சார் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. ஹே   ஹே   ஹே " சந்தனத்தை இழுத்துக் கொண்டு அந்த இடத்தில இருந்து அகன்றார் பிரகாஷ் ராஜ். 

ஆம்புலன்ஸில்  பாடியை ஏற்றி விட்டு எல்லாரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்..
------------------------------
------------------------------


------------------------------

-----
"எங்கள் நாளைய பிரதமரே வாழ்க"

"எங்கள் வருங்கால ஜனாதிபதியே வருக"

"தலைவா நீ யாருன்னு மட்டும் கண்டு பிடிச்சு சொல்லு தலைவா அந்த @@$#$ மவன
கொன்று போட்டிர்றோம்"

"தலைவன் கையையே உடைசுடான் அவன் மண்டைய உடைகாட்டி"

கட்சி ஆபிஸ் முன்னால் ஆயிரகணக்கான பேர் திரண்டு வந்து இருந்தனர்..

ரஜினி முதல்வராகி ஒரு மாதம் முடிய சில நாட்கள் இருந்த்தது. கட்சி கூட்டமும் கூடவே
இறந்த மக்களுக்குக்கான  மதிய அரசின் 


ிவாரண திட்டமும் நடைப் பெற இருந்தது. திட்டத்தை அறிவிக்க
நாட்டின் பிரதமர் அமிதாப் அங்கே வந்து இருந்தார்.. அரங்கு நிறைய
பெருங்கூட்டம். கூட்டத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் அழுகையோடு கூடி
இருந்தார்கள்.. ஆத்மா சாந்திக்காக இறை பிரார்த்தனை நடந்தது.. எல்லா
இடமும் அமைதி நிலவ சர்வ சமய
பிரார்த்தனையும் நடந்து கொண்டு இருந்தது..

சூர்யா தன்னுடைய விழிகளில் வழியாய் அனைவரையும் கவனித்து கொண்டே
இருந்தார். கடைநிலை தொண்டன், அல்லக்கை, சோடா கொண்டு வருபவன், மேடை அலங்காரம்
செய்பவன், என்று யாரையும் விடவில்லை.. எல்லாரும் கடின சோதனை மத்தியிலே
அனுமதிக்க பட்டார்கள்.. பாம் ஸ்குவாட் கூட அழைக்க பட்டு அழைக்கப் பட்டு இருந்தார்கள்.

அப்போது கான்ஸ்டபில் ஒருவர் இரண்டு நாய்களோடு சென்ற பாம் ஸ்குவாட்

சேர்ந்த ஒருவரை சந்தேகபட்டு அழைத்தார்.

"வணக்கம் சார் "
"ஏய் மாஸ்க்க கழட்டு"
"ஏன் சார் என்ன விஷயம்"

"சார் புதுசா வேலைக்கு சேர்த்தவன் சார்"
"என்னைக்கு சேர்ந்த"
"ஒரு மாசம் இருக்கும் சார்"
"ஒரு மாசம் தானே அதுக்குள்ள புடுங்க வந்துட்டிய.. போடா பாம் கீம்
வெடிச்சு &*$% சிதற போகுது.. ஹா ஹா " பக்கத்தில் இருந்த கான்ஸ்டபில் சமயம் புரியமால் கிண்டலடித்தார்

"ஆமா பேர் என்ன?"

"சீனு சார்"

"முழு பெயரும் சீனு தானா"

"சீனிவாசன்,(பவர்ஸ்டார்)"

"எங்க தங்கி இருக்க"

"T.நகர்.. என் நண்பன் உடன் தங்கியுள்ளேன்.. அவன் கூட கம்பியூட்டர் கடை வைச்சு
இருக்கான் சார்"

"சார்" பின்னால் இருந்து ஒரு குரல்..

"டேய் நீ பெயர எழுதிட்டு உன் ஐ. டி நம்பரையும் போட்டுட்டு போ"

சீனு கையில் இருந்த பேனாவை  இழுக்க கான்ஸ்டபிளின் கையில் கீறி கொண்டது

"என்னய்யா நீ.. அறைஞ்சேனா பல்லு பறந்துடும் "

"சாரி சார்"

"சார்"

"யோவ் சொல்லுயா நீ வேற"

"சூரியா ஜீப்பின் பக்கம் இருப்பாராம். உங்கள கவனிச்சுக்க  சொன்னாரு"

------------------------------
------------------------------


------------------------------

----------
"டேய் அவன் இன்னும் சாகல டா",  பிரகாஷ்ராஜ் அடிதொன்டையில் இருந்து அலறினார்.

"என்ன சார் வழக்கம் போலவே புரியாம பேசுரீங்க"

"அவன் தான் டா"

"அவன் தான்னா? யாரு சார்?"

"தமிழ்நாட்டுல இன்னும் 28 கழிச்சு ஒரு பெரிய மேட்டர் நடக்கும் பாரு"

"எப்பிடி சார்"

"அதான் டா அவன் டிசைனே நாம பார்த்த WAR BEGINS என்ற எழுத்துக்கு கீழ ஒரு நம்பர் இருந்துச்சே
என்ன இருந்துச்சு"

"465 "

"அதான் சொன்னேன்"

"ஐயோ குழப்பாதிங்க சார்"

"சும்மா ஜோடிச்சு பாரு ஒண்ணுல இருந்து 30 வரை ஒன்னொன்னா கூட்டினா என்ன வரும்"

"எனக்கு கக்கா வரும்"

"இல்ல சந்தா இது கண்டிப்பா ஏதோ டிசைன் தான், முதல்வர் மீட்டிங்ல இருந்து
இன்னையோட 29 நாள் ஒருவேளை இன்னைக்கு ஏதாவது நடந்தா நான் இந்த கேஸ்ல
கிட்டத்தட்ட வென்ற மாதிரி.."

"மொதல்ல குண்டு வெடிப்பு. இப்ப கூட சரியா 29 நாளைக்கு பிறகு
அவங்க வேற மீட்டிங் வைச்சு இருக்காங்க.. இதுல கண்டிப்பா பிரச்சினை வரலாம்
குண்டு வெடிக்காலாம்.." 

:அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தானே சார்"

"அப்பிடி இல்ல சந்தா..என்ன வேணா  நடக்கலாம் பாப்போம் "

------------------------------
------------------------------


------------------------------

-----------------------
அடுத்த நாள் காலை தினமலரில்..

பிரதமர் - முதல்வர் கலந்து கொண்ட நிவாரண நிகழ்ச்சியில் பயங்கரம்.

கையில் கீறிய காயத்தோடு பாத்ரூமில் ஒரு கான்ஸ்டபில் மரணம் - வைத்தியர்கள் குழப்பம். 

கீறிய கையில் பதிந்திருந்த வாசகம் 

WAR BEGINS...
                                                                               ...to be continued...யாவரும் நலம் SCENECREATOR

அடுத்த பகுதி யாவரும் நலம் தளத்தில்

இதற்கு முந்தைய பாகத்தினை படிக்க
பாகம்1 - click
பாகம்2 - click
பாகம்3 -click

நீங்களும் இந்த தொடரை எழுத வேண்டும் என நினைத்தால் இதில் சென்று register செய்து கொள்ளவும் அதெல்லாம் தேவை இல்லை நீங்களாவே சேர்ந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு  கிளிக்

நன்றி ஹாரி மற்றும் சீனு

24 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கணினி சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதி வந்த உன்னுள் கதை எழுதும் திறமையும் உள்ளது. அதைக் கண்டுகொண்ட ஹாரிக்கு வாழ்த்துக்கள்.... மேலும் முயன்று பார்.....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சின்னா அருமை சின்னா.... டிங்கரிங் செய்ததது மட்டுமே நானும் ஹாரியும்... ஆனால் உழைப்பு முழுவதும் உன்னுடையது, கற்பனை, கதை, கரு, முழுவதும் உன்னுடையது... சந்தானத்தின் பகுதி சந்தானமே பேசுவது அழகாக எழுதி இருந்தாய்.. மிகவும் ரசித்துப் படித்தேன்...

    கொஞ்சம் அதிகமான எழுத்துப் பிழைகள் உள்ளது... எப்படி கவனிக்காமல் விடப்பட்டது என்று தெரியவில்லை... அந்த எழுத்துப் பிழைகளை மட்டும் எடுத்து விட்டால் உன் கதையில் வேறு யாராலும் வேறு எந்த பிழைகளையும் கண்டறிய முடியாது என்பது திண்ணம்.... :-)

    //எங்கள் இந்நாள் பிரதமரே வாழ்// என்பதை எங்கள் நாளைய பிரதமரே வாழ் என்று வருமாறு மாற்றி விடு சின்னா....

    ReplyDelete
  4. தல, கதை இன்னும் படிக்கல. சாயந்தரமா படிச்சிட்டு கருத்து சொல்லுறேன். :(

    ReplyDelete
  5. சுவாரஸ்யமாக செல்கிறது... பாராட்டுக்கள்...

    (முந்தைய கதை மறந்து விட்டதால், முந்தைய பதிவரின் பதிவை படித்து விட்டு வந்தேன்...)

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

    ReplyDelete
  6. எல்லாரும் முடிக்கறப்ப ‘வார் பிகின்ஸ்‘னு மட்டும் முடிக்கறீங்க. எப்பத்தான்யா வார் ஆரம்பிக்கும்? யார் ஆரம்பிக்கப் போறீங்க? கதையில நகைச்சுவையை த்ரில்லோட சேர்த்த விதம் நல்லா இருக்குது. உஙகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தல,
    கதை நல்லா போகுது, நல்ல த்ரில்லிங்..
    சந்தானம், பிரகாஷ்ராஜ் எபிசோடு அந்நியன் பட விவேக், பிரகாஷ்ராஜ் எபிசோடு மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. நேத்து அந்நியன் பார்த்த எபக்ட் போல.. :) :)
    அடுத்து நம்ம பவர் வேற களத்துல இறங்கிட்டார், கலக்குங்கள்... :)
    ஒரே குறை தல, கதையில நிறைய கதாபாத்திரங்கள் வருது, யாரு என்ன பண்ணுறாங்கன்னு ஞாபகம் வச்சுக்க முடியல...அடுத்து எழுதுறவங்க கதாபாத்திரங்களை குறைச்சா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  8. புது முயற்சியா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. நகைச்சுவையும் கலந்து நல்ல முயற்சி. ஆளாளுக்கு ஒருபுதிய கேரக்டரை அறிமுகப் படுத்துவது குழப்பத்தை அதிகரிக்கலாம்! :))

    ReplyDelete
  10. சந்தானம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சூர்யா ...... லிஸ்ட்டு நீண்டு கொண்டே போகுதே? கதை குழப்புகிறது. இத்தனை கரெக்டரை எப்படி நான் மேய்ப்பது?

    திரும்ப ஆரம்பத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

    இன்னும் ஒரு பாகம் தான் ... அடுத்து நான்? ஆகா ... எனக்கெல்லாம் ரொம்ப உதவி தேவைப்படும் போல இருக்கே? சீனு .... ஹாரி ... ஹெல்ப் மீ.

    ReplyDelete
  11. நல்லா இருக்கு.. பகுதி அமைப்புக்கு கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.. (எழுத்து பிழை, உரையாடல் வரிகள் பந்தி போல வருகிறது, படங்கள் சேர்த்து இருக்கலாம்)

    ReplyDelete
    Replies
    1. அட .. விடுப்பா. முதல் முயற்சி தானே? இரண்டாவது மூணாவது அட்டெம்டில் சரியாகிடும். என்னா சின்னா நான் சொல்றது??? (எனக்கு இப்படியாகும் போது தவறாம நீயும் இந்த மாதிரி எல்லாம் வசனம் விடணும். ஓகே?)

      Delete
  12. //சீனு கையில் இருந்த பேனாவை இழுக்க கான்ஸ்டபிளின் கையில் கீறி கொண்டது//

    //கீறிய கையில் பதிந்திருந்த வாசகம் war begins//

    கீறின பிறகு யாரோ வந்து எழுதிட்டு போனாங்களா என்னங்க?

    திணிச்சுட்ட போலவே இருக்கு


    ReplyDelete
  13. ஏற்கனவே சீனுவோட கதையில கூட பல சஸ்பென்ஸ் உடையாமலே கிடக்கு.. இனி எழுதுறவங்க கொஞ்சம் சஸ்பென்ஸ் அடுத்தவங்க கொண்டு செல்ல கூடிய வகைல எழுதுனா கதை நல்லா போகும்.. இல்லை மொத்தமா கதை வாசிக்கும் போது மொக்கையா போய்டும்..

    //ரெண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு சார். விஜயகாந்த், அர்ஜுன் சரத்குமார் மூணு பேருமே கெட்டவங்க. குண்டு வெடிப்பு நடக்ரதுல அர்ஜுன்க்கு கடைசி நேரத்துல உடன்பாடு இல்லாம போயிருக்கலாம், அதனால் மூணு பேருக்குள்ளையும் சண்டை வந்த்ருக்கலாம், அர்ஜுன கட்டிபோட்டுட்டு மத்த ரெண்டு பெரும் சேர்ந்து காரியத்த முடிச்சிருக்கலாம். காரியம் முடிஞ்சதும் மூணு பெரும் சமாதானம் ஆகியிருக்கலாம்//

    //இவங்க மூணு பேருமே நல்லவங்க. இந்தத் திட்டம் கடைசி நேரத்துல இவங்க மூணு பெருகும் தெரிய வந்திருக்கு, தீவிரவாதிகள் கூட அர்ஜுனும் சரத்குமாரும் சண்டை போடுற நேரத்துல விஜயகாந்த் உங்கள எச்சரிக்கை பண்ண வந்திருக்கலாம். உங்களை எச்சரிச்சதும் அவங்கள காப்பாத்த கிளம்பிருக்காரு. இந்த நேரத்துல அர்ஜுன் அந்த உண்மையான தீவிரவாதிகளால கட்டுபட்டிருப்பரு , சரத்குமார் அவங்கள ஓடஓட துரத்தி அடிசிருப்பாறு, விஜயகாந்த் அர்ஜுன் கட்டவிழ்த்து காப்பாதிருப்பாறு//

    இதுக்கு பதில் சரியா சொல்ல படாட்டி பெரிய லாஜிக் மிஸ்டேக் ஆ இது மாறிடும்

    ReplyDelete
  14. //
    "சீனிவாசன்,(பவர்ஸ்டார்)"//

    என்ன சொல்ல வாரிங்க? பாம் squad ல பவர் ஸ்டார்னு பட்டம் குடுக்காங்களா.. இப்படி போட்டா கண்டிப்பா கதையோட ஒன்ற முடியா மச்சி

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. இது நம்ம சீனு டச் தானே

    //போன் ரிங் ஆனால் கூட பாம் வெடிப்பது//
    //காக்கையை போல் கரைந்து கொண்டிருந்த கூட்டமும்//

    சூப்பர் நண்பா

    ReplyDelete
  19. பாத்திரங்கள் கூடிக்கொண்டே போகின்றது!ம்ம் பாம் வெடிக்குமா !

    ReplyDelete
  20. ஹா...ஹா..ஹா... கதை சுவாரஸ்யமா போகுது சகோ! (சென்சார் செய்யப்பட) கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி கதை நன்றாக செல்கிறது.

    War Begins... War Begins... War Begins... அடுத்த பகுதியிலாவது யுத்தம் நடக்குமா? :D :D :D

    ReplyDelete
  21. நல்ல தொடர்ச்சி சின்னா!
    இப்படிப் பட்ட கதையை எப்படி மெயன்டெயின் பண்ணப் போறமோ தெரியலையே..

    ReplyDelete
  22. வித்தியசமாக இருக்கிறது முந்தைய பதிவுகளின் சுவாரஷ்யம் இதில் குறைவுதான் தொடருங்கள்

    ReplyDelete